மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு

மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர் சார்பில்
ஏழை எளிய மக்களுக்கு உணவு
சென்னை,ஜூன்.04,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால்  பொதுமக்கள் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் உணவு தேவைக்கே கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 இவர்களுக்கு நாள்தோறும் பல்வேறு தொண்டு நிறுவணம்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு மன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு Adinath Jain Trust, மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர் சார்பில் உணவு வழங்கப்பட்டது.  3000 பேருக்கு மோர் மற்றும் 3000 பேருக்கு குடிநீர் பாட்டில் வழங்கினர்.
ஊரடங்கு அறிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் உணவு  வழங்கிவரும் இவர்களது சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு BJYM State Secretory Rahul D.Surana செய்திருந்தார்.



Comments