ஆதிநாத் ஜெயின் ட்ரஸ்ட் சார்பில் மதிய உணவு

ஆதிநாத் ஜெயின் ட்ரஸ்ட் 
சார்பில் மதிய உணவு 
சென்னை,ஜூன்.06,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால்  பொதுமக்கள் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் உணவு தேவைக்கே கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் பல்வேறு தொண்டு நிறுவணம்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு மன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு ஆதிநாத் ஜெயின் ட்ரஸ்ட் சார்பில் மதிய உணவு வழங்கினர்.
இது குறித்து தொண்டுநிறுவனத்தின் தன்னார்வலர் சந்தோஷ் ஜெயின்  கூறும்போது;-  கொரோனா ஊரடங்கு போடப்பட்ட நாளில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறோம். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினம்தோறும் 3000க்கும் மேற்பட்டோர்க்கு உணவு அளித்து வருகிறோம். எங்களோடு இணைந்து 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உணவளித்து வருகின்றனர்.
 இவ்வாறு சந்தோஷ் ஜெயின் கூறினார்.

Comments