அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க வேண்டும் தன்னார்வலர்கள் கோரிக்கை

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க வேண்டும்
தன்னார்வலர்கள் கோரிக்கை
சென்னை,ஜூன்.07,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால்  பொதுமக்கள் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் உணவு தேவைக்கே கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் பல்வேறு தொண்டு நிறுவணம்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு மன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே நேற்று சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் ஜாவித் அஹமத், ஹாரிக் அஹமத், ஹாலிக் அஹமத், சுரேஷ் ஆகியோர் உணவு வழங்கினர்.
இது குறித்து தன்னார்வலர் ஜாவித் அஹமத் கூறும்போது;-  கொரோனா ஊரடங்கு போடப்பட்ட நாளில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறோம். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினம்தோறும் 200க்கும் மேற்பட்டோர்க்கு உணவு அளித்து வருகிறோம். 
மேலும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கவேண்டும் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.
தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கொடுக்கும் உணவு போதுமானதாக இல்லை.  போதிய வருமானம் இல்லாமல் உணவை எதிர்பார்த்து அதிகப்படியான மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களது பசியை போக்க கொரோனா ஊரடங்கு காலம்வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கவேண்டும் என்று கொட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜாவித் அஹமத் கூறினார்.

Comments