சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ' வெமா ' ( WEMAAA )

சுற்றுப்புற சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பாக இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ' வெமா ' ( WEMAAA ) 
இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி , சமூக முன்னேற்றம் , பொருளாதார வளர்ச்சி , விவசாய துறையின் புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும் , நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் , சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள் , அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் என பலவற்றை பரிசிலனை செய்து , விவாதிக்கும் வகையில் மாநாடு ஒன்று ' வெமா (WEMAAA)எனும் பெயரில் சென்னையில் நடைபெற்றது . இந்தியாவில் இயங்கும் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில் , இந்தியா மட்டுமல்லாமல் பல சர்வதேச நாடுகளில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பெரு நிறுவனங்கள் , முந்நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , 100 க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் , நூற்றுக்கும் மேற்பட்ட அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர் . 
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மற்றும் புவி சமநிலை தொடர்பான பல்வேறு கருத்துருக்கள் , சமூக அறிவியல் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது . இவர்களின் கூற்றுப்படி அடுத்து வரும் 15 முதல் 20 ஆண்டுகாலம் , புவியின் இயல்பு நிலைக்கு சவாலான காலம் என ஆராய்ந்து அறிவித்திருக்கிறார்கள் . இதனை கருத்தில் கொண்டு நம்முடைய அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமான ... சுகாதாரமான சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதலின் சமநிலை தொடர்பாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன் அகஸ்திய முனிவர் அருளிச்சென்ற விசயங்களை , தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு எளிதாக நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதம் , பல்வேறு கோணங்களில் நடைபெற்றது .
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , விவசாயிகள் , விஞ்ஞானிகள் , பொதுமக்கள் மற்றும் இந்த புவியின் நலன் குறித்து முன்வைக்கும் சிறந்த இரண்டு திடடங்களை தேர்ந்தெடுத்து , அதற்காக 45 லட்ச ரூபாய் மற்றும் நான்கு கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக அளிக்கப்பட்டது . பொதுமக்கள் , விவசாயிகள் , நுகர்வோர் , அதிகாரிகள் , ஆட்சியாளர்கள் ஆகிய ஒரு சாராருக்கும் , கார்ப்பரேட எனப்படும் பெறு நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை .. நிதி ஆதாரப் பகிர்வை செம்மையாக செயல்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடிய இந்த மாநாட்டில் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் .. சமூக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் செயல்கள் குறித்தும் , எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாகவும் , விளக்கமாகவும் விவாதிக்கப்பட்டது . தன்னார்வ தொண்டு பணியில் பன்னிரண்டு துறைகளில் பத்தாண்டிற்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டிருக்கும் சங்கமாஸ் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தரவுகள் பிரிவு நிபுணர்  சுனிஷ் எஸ் . தேவன்,இந்திய இயற்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவரான எஸ் முருகேசன் ,சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் திடடங்களுக்கான மன்றத்தின் தலைவர் மைக்கேல் அஞ்சலோ ஜோதிராஜன், , மூத்த குடிமக்கள் ஆதரவு அமைப்பின் செயலாளர் ஆர் சுப்பாராஜ்  , சங்கமாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதி லலிதா சுனீஷ் மற்றும் சுதீஷ் எஸ் தேவன், நியூ லைஃப் இந்தியா அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதி ஸ்டீபன் ராஜ் , கிராமப்புற வளர்ச்சி சங்கத்தின் நிர்வாகப் பிரதிநிதி கே கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்புற மேற்கொண்டனர் .

Comments